Monday, September 12, 2011

குட்டித் தேனிக்கொரு கணினி கீதம்: மழலைப் பாடல்



கணினியை அழகாய்க் கற்றுக்கொள்!
        இத்தரணியில் ராணிநீ ஒத்துகொள்!
கணினியில் கலைபல கற்றுக்கொள்!
        கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள்!

கணினியின் தோள்களில் தொற்றிக்கொள்!
        நொடியினில் உலகினை வெற்றிகொள்!
கணினியின் நுட்பங்கள் கற்றுக்கொள்!
        காலடியினில் உலகம் பெற்றுக்கொள்!

இணையத்தில் இணைந்திடு கண்மணி!
        இதை இதயத்தில் பொதிந்திடு பொன்மணி!
உலகத்தின் இதயமது கண்மணி!
        உலகோடு பழகிடு பொன்மணி!
விரிஅறிவின் உதயமது மின்மினி!
        கணிப்பொறியின் பயணமது கண்மணி!

ஏழாம் அறிவிது கண்மனி!
       அதை அறிவதுன் கடமை பொன்மணி!
புத்திக்கு மிட்டாய் இது கண்மனி!
       எத்திக்கும் சிட்டாய் நீபயணி!

No comments:

Post a Comment