சிவந்து சிரிக்குது ரோசாப்பூ!
முள்கிரீடம் தரித்த ரசாப்பூ!
சந்தனம் சிந்திடும் செண்பகப்பூ!
சிந்தையில் தந்திடும் புன்சிரிப்பு!
வெண்மையின் புன்னகை மல்லிகைப்பூ!
உண்மையின் பொன்னகை மல்லிகைப்பூ!
மஞ்சளில் துஞ்சிடும் சாமந்திப்பூ
நெஞ்சினில் கொஞ்சிடும் நல்வனப்பு!
ஊதா ஊறிடும் ஊதாப்பூ!
பாடம் எதுவும் ஓதாப்பூ!
நீலத்தில் உறவாடும் சங்குப்பூ!
நீலக்கடல் பிறவாத சங்கு பூ!
சுகந்தம் அள்ளும் சாதிமல்லி!
சுகமாய்க் கொல்லும் உயிரைக்கிள்ளி!
No comments:
Post a Comment